ETV Bharat / state

ரூ. 3 லட்சம் குட்கா பறிமுதல்!

author img

By

Published : Jul 21, 2021, 9:10 AM IST

சிவகாசி அருகேயுள்ள திருமேனி நகர் பகுதியில் குடோனில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ. 3 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

3-lakh-rupees-worth-gutka-seized-in-sivakasi
சிவகாசியருகே ரூ. 3 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

விருதுநகர்: சிவகாசி அருகேயுள்ள திருமேணி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அமல்ராஜ், முத்துக்குமார். இவர்கள் இருவரும் சிவகாசி பகுதியில் குடோன் ஒன்றை வாடகைக்கு எடுத்து அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களைப் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற சிவகாசி கிழக்கு காவல் நிலைய காவலர்கள் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ. 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து குடோன் உரிமையாளர் அமல்ராஜ் என்பவரை கைது செய்தனர்.

மற்றொரு நபரான முத்துக்குமார் தலைமறைவாகி உள்ளார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 5 லட்சம் ரூபாய் மதிப்புடைய புகையிலை பொருள்கள் பறிமுதல் - ஒருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.